உள்ளூர் செய்திகள்
சொத்து வரி உயர்வை கண்டித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்
சொத்து வரி உயர்வை கண்டித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் புளியந்தோப்பு அருகில் வட சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரம்பூர்:
சொத்துவரி உயர்வை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் புளியந்தோப்பு தாசமாகன் அருகில் வட சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் தேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.