என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சொத்து வரி"
- சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சொத்துவரி வசூல் தீவிரமாக்கப்பட்டது.
- புதிய நிதியாண்டிற்கான முதல் அரையாண்டிற்கு சொத்துவரி வசூல் இன்று முதல் நடைமுறைக்கு வந்தது.
சென்னை:
சென்னை மாநகராட்சியின் வருவாயில் சொத்துவரி மிக முக்கியமானது. குடியிருப்புகள், வணிக கட்டிடங்கள், வணிக வளாகங்கள் என 12 லட்சம் பேர் சொத்து வரி செலுத்தக் கூடியவர்களாக உள்ளனர். சொத்து வரி ஆண்டுக்கு 2 முறை வசூலிக்கப்படுகிறது.
கடந்த நிதியாண்டில் சொத்துவரி இலக்கு ரூ.1,600 கோடி நிர்ணயிக்கப்பட்டு இலக்கை விட கூடுதலாக ரூ.250 கோடி வசூலித்து மொத்தம் ரூ.1,800 கோடி மாநகராட்சிக்கு கிடைத்து உள்ளது. சொத்துவரி 2-வது அரையாண்டிற்கான காலம் மார்ச் 31-ந்தேதி நேற்றுடன் முடிந்தது.
நிதியாணடின் இறுதி நாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் வந்ததால் அந்த நாளை வேலை நாளாக அறிவித்து மாநகராட்சி வருவாய் அதிகாரி ஊழியர்கள், அதிகாரிகள் செயல்பட்டனர்.
சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சொத்துவரி வசூல் தீவிரமாக்கப்பட்டது. அதன் விளைவாக ஆன்லைன் வழியாகவும், நேரடியாகவும் மக்கள் சொத்துவரி செலுத்தினர்.
நள்ளிரவு வரை சொத்து வரி வருவாயை கணக்கிட்டனர். அதன் அடிப்படையில் ரூ.1,800 கோடி சொத்துவரி வசூல் செய்யப்பட்டுள்ளது.
புதிய நிதியாண்டிற்கான முதல் அரையாண்டிற்கு சொத்துவரி வசூல் இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த மாதம் இறுதிக்குள் சொத்துவரி செலுத்துபவர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். கடந்த நிதியாண்டிற்கான சொத்துவரி பாக்கி வைத்திருப்பவர்களுக்கு அபராதமும் வசூலிக்கப்படும் என்று வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- முன்னாள் படை வீரர்களின் சொந்த வீட்டிற்கு அவர்களின் சொந்த பயன்பாட்டில் குடியிருப்பாக பயன்படுத்தப்படும் கட்டிடத்திற்கு மட்டும் இச்சலுகை வழங்கப்படும்.
- முன்னாள் படை வீரர் வருமானவரி செலுத்துபவராக இருக்கக் கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
நடப்பு நிதியாண்டில் இருந்து முன்னாள் ராணுவ வீரர்கள் சொத்து வரி, வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னாள் படை வீரர்களின் சொந்த வீட்டிற்கு அவர்களின் சொந்த பயன்பாட்டில் குடியிருப்பாக பயன்படுத்தப்படும் கட்டிடத்திற்கு மட்டும் இச்சலுகை வழங்கப்படும் என்றும் முன்னாள் படை வீரர் வருமானவரி செலுத்துபவராக இருக்கக் கூடாது என்றும் அதில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
- சொத்து வரி செலுத்தாமல் இருப்பவர்களுக்கு நோட்டீஸ் செல்போன் வழியாக எஸ்.எம்.எஸ். அனுப்பப்படுகிறது.
- 100 வணிக நிறுவன உரிமையாளர்களிடம் இருந்து சுமார் ரூ.70 கோடி நீண்டகாலமாக வசூல் ஆகாமல் உள்ளது
சென்னை:
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்துவரியை வசூலிப்பதில் மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
பருவமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களை சொத்துவரி, தொழில்வரி, தொழில் உரிமம் போன்ற வரி விதிப்புக்கு கடந்த 3 மாதமாக தீவிரப்படுத்தாமல் இருந்து வந்த நிலையில் மார்ச் 31-ந் தேதியுடன் இந்த நிதியாண்டிற்கான சொத்து வரி செலுத்தும் அவகாசம் முடிகிறது.
அதனால் மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகள், ஊழியர்கள் 15 மண்டலங்களிலும் வரி வசூலை தீவிரப்படுத்தி வருகின்றனர். சென்னையில் 4 லட்சம் வணிக கட்டிடங்கள், 8 லட்சம் வீடுகள் என மொத்தம் 12 லட்சம் சொத்துகளுக்கு வரி விதிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது.
இந்த நிதியாண்டிற்கு ரூ.1600 கோடி சொத்து வரி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு அதில் இதுவரையில் ரூ.1,296 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட ரூ.2 கோடி கூடுதலாக வசூலிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.300 கோடி இன்னும் 40 நாட்களில் வசூலிக்கப்பட வேண்டும்.
சொத்து வரி செலுத்தாமல் இருப்பவர்களுக்கு நோட்டீஸ் செல்போன் வழியாக எஸ்.எம்.எஸ். அனுப்பப்படுகிறது. நீண்ட காலமாக சொத்து வரி செலுத்தாமல் நிலுவையில் உள்ளவர்களுக்கு நோட்டீஸ் வினியோகிக்கப்படுகிறது.
சென்னை மாநகராட்சிக்கு நீண்ட காலமாக சொத்து வரி செலுத்தாமல் பல லட்சங்களை நிலுவையில் வைத்துள்ள வணிக நிறுவனங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
100 வணிக நிறவன உரிமையாளர்களிடம் இருந்து சுமார் ரூ.70 கோடி நீண்டகாலமாக வசூல் ஆகாமல் உள்ளது அவர்களின் வணிக கட்டிடங்களை ஜப்தி செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான சட்டம் சார்ந்த பணிகள் நடந்து வருகின்றன.
எனவே பொதுமக்கள் தாங்கள் செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரியை செலுத்தினால்தான் அடிப்படையான வசதிகளை செய்ய முடியும். மார்ச் 31-ந் தேதி வரை காத்திருக்காமல் முன்கூட்டியே சொத்துவரி செலுத்தி மேல் நடவடிக்கை மற்றும் அபராதத்தை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீா் கட்டணம், இதர வரியினங்களையும் செலுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
- 2023- 24 ஆம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டுக்கான சொத்து வரியை வரும் அக்டோபா் 31 -ந் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
காங்கயம்:
காங்கயம் நகராட்சியில் 2023-24 ம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டுக்கான சொத்துவரியை அக்டோபா் 31 -ந் தேதிக்குள் செலுத்தி 5 சதவீதம் ஊக்கத்தொகை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் கு.கனிராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- காங்கயம் நகராட்சியில் வசிப்பவா்கள் 2023- 24 ஆம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டுக்கான சொத்து வரியை வரும் அக்டோபா் 31 -ந் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி பொதுமக்கள் சொத்து வரியை செலுத்திகொள்ளலாம்.
இதேபோல நகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீா் கட்டணம், இதர வரியினங்களையும் செலுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
- 2023-2024-ம் ஆண்டிற்கான முதல் அரையாண்டிற்கு சொத்து வரியினை செலுத்துவதற்கான கால அவகாசம் கடந்த 30-ந் தேதியுடன் நிறைவு பெற்றது.
- சொத்துவரியினை செலுத்த தவறியவர்களுக்கு மாதம் தோறும் ஒரு சதவீதம் அபராதம் விதிக்க வாய்ப்புள்ளது.
குமாரபாளையம்:
குமாரபாளையம் நகராட்சி ஆணையர் சரவணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குமாரபாளையம் நகராட்சி சொத்து வரி விதிப்பாளர்கள் 2023-2024-ம் ஆண்டிற்கான முதல் அரையாண்டிற்கு சொத்து வரியினை செலுத்துவதற்கான கால அவகாசம் கடந்த 30-ந் தேதியுடன் நிறைவு பெற்றது.
சொத்துவரியினை செலுத்த தவறியவர்களுக்கு மாதம் தோறும் ஒரு சதவீதம் அபராதம் விதிக்க வாய்ப்புள்ளது. எனவே முதல் அரையாண்டு சொத்துவரியினை நகராட்சியில் உடன் செலுத்தி அபராதத்தை தவிர்க்குமாறு தெரிவிக்கபப்டுகிறது.
மேலும் 2-ம் அரையாண்டு சொத்துவரியினை வருகிற 31-ந் தேதிக்குள் செலுத்தி 5 சதவீத சலுகை பெற்றுக்கொள்ளலாம். எனவே சொத்துவரி செலுத்துபவர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி 5 சதவீத சலுகையினை பெற்று பயன்பெறலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
- இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியியை அக்.1 முதல் மார்ச் 31 வரையிலும் செலுத்த வேண்டும்.
- சொத்து வரியை பொதுமக்கள் எளிதாகச் செலுத்தும் வகையில் மாநகராட்சி சார்பில் அரையாண்டு தொடக்கம், இறுதியில் குறுந்தகவல் மூலம் வலைதள இணைப்பு அனுப்பப்படுகிறது.
சென்னை:
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை ஏப்.1 முதல் செப்.30-ந் தேதி வரையிலும், இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியியை அக்.1 முதல் மார்ச் 31 வரையிலும் செலுத்த வேண்டும்.
இதில் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை ஏப்.30-ந் தேதிக்குள்ளும், இரண்டாம் அரையாண்டு சொத்து வரியை அக்.30-ந் தேதிக்குள்ளும் செலுத்துவோருக்கு மாநகராட்சி சார்பில் 5 சதவீதம் ஊக்கத் தொகை அதிகபட்சம் ரூ. 5 ஆயிரம் வரை வழங்கப்பட்டு வருகிறது. நிகழாண்டு முதல் நிதியாண்டில் ரூ. 769.62 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டு உள்ளது. இவற்றில் ரூ.321 கோடியை இணையதளம் மூலம் 4.77 லட்சம் சொத்து உரிமையாளர்கள் செலுத்தி உள்ளனர்.
சொத்து வரியை பொதுமக்கள் எளிதாகச் செலுத்தும் வகையில் மாநகராட்சி சார்பில் அரையாண்டு தொடக்கம், இறுதியில் குறுந்தகவல் மூலம் வலைதள இணைப்பு அனுப்பப்படுகிறது.
இதுபோல் www.chennai corporation.gov.in என்ற மாநகராட்சி இணையதளம், நம்ம சென்னை கைப்பேசி செயலி, சொத்துவரி ரசீதில் உள்ள கியூ ஆர் குறியீடு மூலம் சொத்து வரியை செலுத்தலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பேரூராட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக சொத்துவரி, குடிநீா் கட்டணம் உள்ளிட்ட வரி இனங்கள் செலுத்தாமல் இருந்தனர்.
- 2 வீடுகளில் குடிநீா் இணைப்பை நிா்வாகத்தினா் துண்டித்தனா்.
அவிநாசி
அவிநாசி பேரூராட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக சொத்துவரி, குடிநீா் கட்டணம் உள்ளிட்ட வரி இனங்கள் செலுத்தாமல் உள்ளவா்களை உடனடியாக செலுத்தக் கோரி செயல் அலுவலா் ராமலிங்கம் உத்தரவிட்டிருந்தாா். இதையடுத்தும் சொத்து வரி மற்றும் குடிநீா் கட்டணம் செலுத்தாத 2 வீடுகளில் குடிநீா் இணைப்பை பேரூராட்சி நிா்வாகத்தினா் சனிக்கிழமை துண்டித்தனா்.
மேலும் 2022, 2023-ம் ஆண்டு வரையிலான நிலுவையிலுள்ள சொத்துவரி, குடிநீா் உள்ளிட்ட வரியினங்களை பொதுமக்கள் உடனடியாக செலுத்த வேண்டும் என நிா்வாகத்தினா் அறிவுறுத்தியுள்ளனா்.
- 2 ஆண்டுகளுக்கு மேல் சொத்து வரி நிலுவை வைத்துள்ளோர் விபரங்களையும், மாநகராட்சி சேகரித்து வருகிறது.
- சொத்து உரிமையாளர்களின் சொத்துவரி சீட்டில் இடம்பெற்றுள்ள கியூ.ஆர். குறியீடு உதவியுடன் சொத்து வரியினை செலுத்தலாம்.
சென்னை:
சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி பிரதான வருவாயாக உள்ளது. மொத்தமுள்ள 13 லட்சம் சொத்து உரிமையாளர்களிடமிருந்து, அரையாண்டுக்கு 750 கோடி ரூபாய் என, ஆண்டுக்கு 1,500 கோடி ரூபாய் வசூலாகிறது.
ஆனால், 13 லட்சம் சொத்து உரிமையாளர்களில், 3.50 லட்சத்துக்கு மேற்பட்டோர் முறையான வரி செலுத்தாமல் உள்ளனர். இவர்களால், மாநகராட்சிக்கு ஆண்டுதோறும் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், சொத்து வரி குறைவாக கணக்கிடப்பட்ட 3 லட்சம் சொத்து உரிமையாளர்களின் சொத்துக்கள் மறுமதிப்பீடு செய்யும் பணியும் நடந்து வருகிறது.
அதேபோல், 2 ஆண்டுகளுக்கு மேல் சொத்து வரி நிலுவை வைத்துள்ளோர் விபரங்களையும், மாநகராட்சி சேகரித்து வருகிறது.
அந்த வகையில், சென்னை மாநகராட்சியில் 3.50 லட்சம் சொத்து உரிமையாளர்கள், 200 கோடி ரூபாய்க்கு மேல் வரி செலுத்தாமல் உள்ளனர். நிலுவையை வசூலிக்க, மாநகராட்சி அதிரடியாக களம் இறங்கியுள்ளது.
இதற்கிடையே இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சொத்துவரியை மார்ச் 31-ந் தேதிக்குள் செலுத்தாமல் நிலுவை வைத்துள்ள வரித்தொகை மீது, மாதத்திற்கு 1 சதவீதம் தனிவட்டியுடன் சேர்த்து செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 13 லட்சத்திற்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்களில், தற்போது நிலுவை சொத்துவரி செலுத்தாத 3.50 லட்சத்திற்கு மேற்பட்ட சொத்து உரிமையாளர்களின் நிலுவை வரித்தொகை மீது, மேற்படி சட்ட விதிகளின்படி 1 சதவீதம் தனிவட்டி விதிக்கப்பட் டுள்ளது.
சொத்து வரி உரிமையாளர்கள் நிலுவை சொத்துவரியினை எவ்வித சிரமுமின்றி, கீழ்கண்ட வழிமுறைகள் மூலம் எளிதாக செலுத்தலாம்.
1. வரிவசூலிப்பாளர்களின் மூலமாக, ஸ்வைப்பிங் வசதியுடன் கூடிய கையடக்ககருவி உதவியுடன், கடன் மற்றும் பற்று அட்டைகள் மூலமாக செலுத்தலாம்.
2. மண்டலம், வார்டு அலுவலகங்களில் அமைந்துள்ள இ-சேவை மையங்களில் சொத்துவரி செலுத்தலாம்.
3. பெருநகர சென்னை மாநகராட்சியுடன் ஒப்பந்தம் இயற்றியுள்ள குறிப்பிட்ட வங்கிகளில், நேரடியாக பணமாக செலுத்தலாம்.
4. 'நம்ம சென்னை' செயலி மற்றும் 'பே.டி.எம்.' – முதலிய கைப்பேசி செயலி மூலமாக செலுத்தலாம்.
5. பி.பி.பி.எஸ். (பாரத் பில் பேமெண்ட் சிஸ்டம்) என்ற சேவை மூலமாகவும் சொத்துவரி செலுத்தலாம்.
6. பெருநகர சென்னை மாநகராட்சியின் இணைய தளம் www.chennaicorporation.gov.in வாயிலாக, இணைய வழி செலுத்துதல் மூலம், பரிமாற்றக் கட்டணம் இல்லாமல் செலுத்தலாம்.
7. சொத்து உரிமையாளர்களின் சொத்துவரி சீட்டில் இடம்பெற்றுள்ள கியூ.ஆர். குறியீடு உதவியுடன் சொத்து வரியினை செலுத்தலாம்.
8. வருவாய் துறை தலைமையிடத்தில், நிறுவப்பட்டுள்ள கியோஸ்க் என்ற தானியங்கி கருவின் மூலம், சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்து வரி காசோலையினை எளிதாக செலுத்தி, சொத்து வரி ரசீதுகளை பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவுறுத்தலுக்குப் பிறகும் சொத்து வரி செலுத்தாவிட்டால் வரி செலுத்தாதவர்களின் சொத்துக்கள் ஜப்தி செய்யப்படும் என்று மாநகராட்சி வருவாய் துறையினர் கூறி உள்ளனர். பிறகு அந்த சொத்துக்கள் சட்டப்படி ஏலம் விடப்பட்டு வரி வசூலிக்க திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- கடந்த சில மாதங்களாக சோதனை அடிப்படையில் பரிசோதிக்கப்பட்டது.
- குறைபாடுகள் சரி செய்யப்பட்ட பிறகு கியூ.ஆர்.குறியீட்டை பயன்படுத்துவது தொடர்பான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.
சென்னை:
சென்னையில் கியூ.ஆர்.குறியீட்டை பயன்படுத்தி சொத்துவரி, குடிநீர் வரி செலுத்துவதற்கான வசதி தொடங்கப்பட்டுள்ளது. மின்ஆளுமை மற்றும் ஜி.ஐ.எஸ். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கியூ.ஆர். குறியீடு மூலம் பொது மக்கள் சேவைகளை செயல்படுத்துவதற்கான மாநில அரசின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த புதிய வசதி தொடங்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் வாரியம் ஆகியவற்றில் 80 லட்சம் நுகர்வோர் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரின் வீடுகளிலும் கியூ.ஆர். குறியீடு ஒட்டப்படும். அதன் மூலம் பொதுமக்கள் ஸ்கேன் செய்து குடிநீர் வரி, சொத்து வரியை கட்டலாம்.
மாநகராட்சி பணிகள் தொடர்பாக ஏதேனும் புகார் இருந்தாலும் இந்த கியூ.ஆர். குறியீடு மூலம் தெரிவிக்கலாம்.
இதற்கு முன்பு மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரியத்துக்கு குறைகள் தொடர்பாக புகார் செய்ய ஒவ்வொரு முறையும் அதிகாரிகளின் நம்பரை தேடி கண்டுபிடிக்க வேண்டும். அல்லது நேரில் செல்ல வேண்டும். இவை இரண்டுமே கடினமானது.
இந்த பிரச்சினைகளை தடுக்க கோடை வெயில் மற்றும் பருவமழை காலத்தில் இந்த வசதி பயனுள்ளதாக அமையும்.
கடந்த சில மாதங்களாக இந்த முறை சோதனை அடிப்படையில் பரிசோதிக்கப்பட்டது. அதில் உள்ள குறைபாடுகள் சரி செய்யப்பட்ட பிறகு கியூ.ஆர்.குறியீட்டை பயன்படுத்துவது தொடர்பான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.
சொத்துவரி, குடிநீர் வரி செலுத்துதல், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் பெறுதல், பொதுவான குறைகளை பதிவு செய்தல், திட்டங்களுக்கு ஒப்புதல் பெறுதல், வர்த்தக உரிமம் பெறுதல் போன்றவை தொடர்பாகவும் கியூ.ஆர். குறியீடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
குடியிருப்புகள் தவிர பஸ் நிலையங்கள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், மயானங்கள், சமூக நல மையங்கள் மற்றும் பொது கழிப்பறைகளிலும் கியூ.ஆர். குறியீடு ஒட்டப்படும்.
இது தொடர்பாக கட்டுப்பாட்டு மையத்தில் புகார்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தீர்வு காண்பதற்காக அனுப்பப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- மறுஆய்வு பணிகளை 9 மாதங்களுக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- கட்டிடங்களை மறு அளவீடு செய்யும் பணிகள் முடிந்ததும் சென்னை மாநகராட்சிக்கு கூடுதல் சொத்துவரி வசூலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:
சென்னை மாநகராட்சியில் சொத்து வரியை கணக்கீடு செய்ய புவிசார் தகவல் வரைபடம் தயாரிக்கப்பட்டது. இதற்காக டிரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வீடுகள், வணிக வளாகங்கள், அரசு கட்டிடங்களின் பரப்பளவு கணக்கீடு செய்யப்பட்டது.
இதில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில் உள்ள 3.10 லட்சம் கட்டிடங்களில் சொத்து வரி செலுத்துவதில் மாறுபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சிக்கு அறிக்கை சமர்பிக்கப்பட்டது.
அதில் 30 ஆயிரத்து 899 கட்டிடங்களை மாநகராட்சி வரி வசூலிப்பாளர்கள் அளவீடு செய்து உறுதி செய்தனர். அவர்களுக்கு தற்போது சரியான சொத்துவரி வசூலிக்கப்பட்டு வருகிறது.
மீதம் உள்ள 2 லட்சத்து 79 ஆயிரத்து 240 கட்டிடங்களில் சொத்துவரி நிர்ணயம் செய்வதில் குளறுபடி உள்ளது. இதையடுத்து இந்த கட்டிடங்களை மறுஅளவீடு செய்யும் பணி முழு வீச்சில் தொடங்கி நடந்து வருகிறது. இந்த மறுஆய்வு பணிகளை 9 மாதங்களுக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் சொத்துவரி மாறுபாடு உள்ள கட்டிடங்களின் எண்ணிக்கை மண்டல வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பணிகளுக்காக ஒப்பந்தம் கோரப்பட்டது. ஒப்பந்ததாரர்களுக்கு பணி ஆணையத்தை மேயர் பிரியா வழங்கினார். இந்த பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு சீருடை, தொப்பி மற்றும் அடையாள அட்டை வழங்கப்பட்டது.
மேலும் இந்த பணியில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு மாறுபாடு உள்ள கட்டிடங்கள் குறித்த விவரங்களை மண்டல வாரியாக சென்னை மாநகராட்சி பிரித்து வழங்கியுள்ளது.
இந்த கட்டிடங்களை மறு அளவீடு செய்யும் பணிகள் முடிந்ததும் சென்னை மாநகராட்சிக்கு கூடுதல் சொத்துவரி வசூலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- தஞ்சாவூர் மாவட்டத்தில் 589 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம கூட்டம் நடைபெற்றது.
- பல்வேறு கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து விரைந்து முடிக்க அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் , பாபநாசம் ஊராட்சி ஒன்றியம் ராமானுஜபுரம் ஊராட்சியில் தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கலந்து கொண்டார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு கிராம ஊராட்சிகளில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் நிர்ணயம் செய்தல் தொடர்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 589 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம கூட்டம் நடைபெற்றது.
அந்த வகையில் ராமானுஜபுரம் ஊராட்சி ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் மற்றும் நிதி செலவினங்கள் குறித்தும் உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேலும் கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை ம், சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஊட்டச்சத்து இயக்கம், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை செய்தல், தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், இணையவழி வீட்டு வரி, சொத்து வரி செலுத்துதல், வேளாண்மை உழவர் நலத்துறை, நமக்கு நாமே திட்டம், மகளிர் திட்டம் மற்றும் முதியோர் உதவி எண், விவசாயிகள் கடன் அட்டை போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்தும் விவாதித்து பொதுமக்களு டைய பல்வேறு கோரிக்கை களை கேட்டறிந்து விரைந்து முடித்திட அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் பூர்ணிமா, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சங்கர், வேளாண்மை இணை இயக்குனர் நல்லமுத்துராஜா, பாபநாசம் ஒன்றிய குழு உறுப்பினர் சுமதி கண்ணதாசன், ஊராட்சி குழு உறுப்பினர் தாமரைச்செல்வன், பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகுமார், சுதா, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நடராஜன் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்