உள்ளூர் செய்திகள்
பேரிடர் மேலாண்மை குழு சார்பில் பயிற்சி பட்டறை நடைபெற்றபோது எடுத்த படம்.

நாங்குநேரி பேரிடர் மேலாண்மை குழு சார்பில் பயிற்சி பட்டறை

Published On 2022-05-08 09:32 GMT   |   Update On 2022-05-08 09:32 GMT
நாங்குநேரி பேரிடர் மேலாண்மை குழு சார்பில் பயிற்சி பட்டறை நடைபெற்றது.
நாங்குநேரி:-

நாங்குநேரி தாலுகா, குறுவட்டம் பகுதி சமுதாய தன்னார்வலர்களுக்கான  முதல் உதவி பேரிடர் மேலான்மை , தீ விபத்து குறித்து அடிப்படை பயிற்சி பட்டறை நாங்குநேரி சமுதாய நல கட்டிடத்தில் நடைபெற்றது.


நிகழ்ச்சியில் தாசில்தார் இசக்கிபாண்டி தலைமை தாங்கி பேரிடர் காலத்தில் அரசு செய்திடும் துரித நடவடிக்கை குறித்து எடுத்துரைத்தார்.


நாங்குநேரி தீயணைப்புத்துறை அதிகாரி மற்றும் அலுவலர்கள் தீவிபத்து மற்றும் பாதுகாப்பு குறித்து செய்முறை விளக்கம் அளித்தனர்.  நாங்குநேரி ரெட்கிராஸ் செயலர் சபேசன் பேரிடர் கால பாதுகாப்பு மற்றும் அடிப்படை முதல் உதவி குறித்து விழிப்புணர்வு வழங்கினார்.


நிகழ்ச்சியில்  தன்னார்வலர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்துகொண்டனர். நாங்குநேரி இரு குறுவட்ட வருவாய் ஆய்வாளர்  லட்சுமண பெருமாள் நன்றி கூறினார். 

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம நிர்வாக அதிகாரிகள்  செய்தனர். தன்னார்வலர்களுக்கான விழிப்புணர்வு கையேடு வழங்கப்பட்டது.
Tags:    

Similar News