உள்ளூர் செய்திகள்
இருசக்கரவாகனத்தை நிறுத்துவதில் தகராறு- மருத்துவரை தாக்கியவர் கைது
ஜெ.ஜெ.நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தை நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் மருத்துவரை தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை:
மேலும் யோகராஜ் அவதூறாக பேசி கீழே கிடந்த கல்லை எடுத்து அசோக்கின் இருசக்கர வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தி அசோக்கை கையால் தாக்கியுள்ளார்.
இது குறித்து அசோக் ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது. ஜெ.ஜெ.நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை வழக்கில் சம்பந்தப்பட்ட யோகராஜ் என்பவரை கைது செய்தனர்.
சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த அசோக் என்பவர் அரசு மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டிற்கு எதிர்புறம் வசிக்கும் யோகராஜின் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் நபர், அசோக் வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளார். உடனே அசோக், இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்த நபரிடம் வாகனத்தை எடுக்கும்படி கூறியுள்ளார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த யோகராஜ், மருத்துவர் அசோக்கிடம் தகராறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து அசோக் ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது. ஜெ.ஜெ.நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை வழக்கில் சம்பந்தப்பட்ட யோகராஜ் என்பவரை கைது செய்தனர்.