உள்ளூர் செய்திகள்
ஸ்ரீசீதாராம கல்யாண மகோத்ஸவம் விழா நடந்த போது எடுத்த படம்.

ஸ்ரீசீதாராம கல்யாண மகோத்ஸவம் விழா

Published On 2022-04-21 10:01 GMT   |   Update On 2022-04-21 10:01 GMT
காட்டுப்புத்தூர் அருகே ஸ்ரீசீதாராம கல்யாண மகோத்ஸவம் விழா நடைபெற்றது
திருச்சி:

திருச்சி மாவட்டம், தொட்டியம் காட்டுப்புத்தூர் அருகே உள்ள நாகையநல்லூர் கிராமத்தில் ஸ்ரீசீதாராம கல்யாண மகோத்ஸவம் விழா நடைபெற்றது.

ஸ்ரீசீதாராம கல்யாண மகோத்ஸவம் விழா கடந்த 10 ந்தேதி சிறப்பு பஜனையுடன் தொடங்கியது. குத்துவிளக்கு பூஜை, மற்றும் ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்திக்கு காப்பு உற்சவம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து தோடயமங்களம், குருகீர்த்தனைகள், ஸ்ரீ கீதகோவிந்தம், அஷ்டபதி திவ்யநாமம், ராமர் பாடல்கள், என பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் நடைபெற்றது.  

விழாவில் முக்கிய நிகழ்வான ஸ்ரீசீதா ராமகல்யாண மகோற்சவ விழா நடைபெற்றது. விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பங்கேற்று சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர்.
Tags:    

Similar News