உள்ளூர் செய்திகள்
தங்கம், சென்னை விமான நிலையம் (கோப்பு படம்)

சென்னை விமான நிலையத்தில் ரூ.57.07 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

Published On 2022-04-20 18:21 GMT   |   Update On 2022-04-20 18:21 GMT
துபாயில் இருந்து தங்கத்தை கடத்தி வந்த விமான பயணி ஒருவரையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சென்னை:

துபாயிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த இரண்டு பயணிகளை, புலனாய்வு தகவல் அடிப்படையில் சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் இடைமறித்து விசாரித்தனர். 

அவர்களிடம் சோதனையிட்டபோது, பசை வடிவில் மறைத்து கடத்தி வந்த தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. 1.18 கிலோ எடை கொண்ட அந்த தங்கத்தின் மதிப்பு ரூ.57.07 லட்சமாகும். சுங்கச் சட்டம் 1962-ன் கீழ் கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதை கடத்தி வந்த பயணியையும் கைது செய்தனர்.

இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய முதன்மை சுங்கத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News