உள்ளூர் செய்திகள்
ராசிபுரம் அருகே கல்லூரி ஊழியர் தீயில் கருகி பலியானார்.
நாமக்கல்:
சென்னை , நுங்கப்பாக்கத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் , 55. இவர் நாமகிரிப்பேட்டை அருகே தனியார் கல்லூரியில் சமையல் வேலை செய்து வந்தார். காக்காவேரி கிராமத்தில் அறையெடுத்து தங்கியிருந்தார்.
கடந்த 4-ம் தேதி காலை அறையில் தங்கியிருந்தபோது , போதையில் பீடியில் இருந்து நெருப்பு , அவரது உடையில் பட்டு வெங்கடேஷ் பலத்த தீக்காயம் அடைந்தார்.
ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின் சென்னை தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பல னின்றி நேற்று இறந்தார்.
இதுகுறித்து நாமகிரிப் பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.