உள்ளூர் செய்திகள்
.

கல்குவாரி குட்டையில் மூழ்கி சிறுமி பலி

Published On 2022-04-17 08:17 GMT   |   Update On 2022-04-17 08:17 GMT
மேட்டூர் அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி சிறுமி பலியானார்.
மேட்டூர்,

மேட்டூரை அடுத்த கோம்பைக்காடு பகுதியில் தமிழ்நாடு கனிம நிறுவனத்திற்கு சொந்தமான கல்குவாரி உள்ளது.


 இந்த கல்குவாரி அருகே உள்ள வனப்பகுதியில் அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் ஆடு, மாடு மேய்க்க செல்வார்கள். கோம்பைக்காடு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி பாலச்சந்திரன் என்பவரின் மகள் தாரணி (வயது 11). இவள் 6ம் வகுப்பு படித்து வந்தாள். தாரணி தனது தாத்தா மற்றும் பாட்டியுடன் சேர்ந்து ஆடு மேய்க்க சென்றாள்.


அப்போது அங்குள்ள கல்குவாரி குட்டையில் இறங்கி கை, கால் கழுவும் பொழுது தவறிவிழுந்து விட்டார். ஆழமான பகுதிக்குச் சென்ற தாரணி தண்ணீரில் மூழ்கினார். 

தாரணியின் அலறல் சத்தம் கேட்டு அவருடைய தாத்தா பெரியசாமி குட்டையில் மூழ்கிய தனது பேத்தி தாரணியை மீட்டு வந்தார். எனினும் தாரணி இறந்து விட்டார்.

தகவல் அறிந்து மேட்டூர் தாசில்தார் முத்துராஜா சம்பவ இடத்திற்கு சென்று நேரில் பார்வையிட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தாரணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News