உள்ளூர் செய்திகள்
செல்போன் பறிப்பு (கோப்பு படம்)

எழும்பூரில் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறிப்பு

Published On 2022-03-30 09:23 GMT   |   Update On 2022-03-30 09:23 GMT
எழும்பூரில் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை:

சென்னை கெங்கு ரெட்டி தெரு பகுதியை சேர்ந்தவர் பல்லம் அசராஜ் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் எழும்பூரில் உள்ள பிரபல ஓட்டலில் வேலையை முடித்து விட்டு எழும்பூர் டான் பாஸ்கோ பள்ளி எதிர் புறமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஆட்டோவில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் செல்போனை பறித்து சென்றனர். ஆட்டோவில் வந்தவர்களில் ஒருவன் நீலநிற லுங்கி மற்றும் மஞ்சள் நிற டீசர்ட் அணிந்து இருந்ததாகவும், மற்றொரு நபர் பூ போட்ட கலர் சட்டை அணிந்து இருந்ததாகவும் பல்லம் அசராஜ் எழும்பூர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

Tags:    

Similar News