உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

உடுமலையில் அ.தி.மு.க. அமைப்பு தேர்தல்

Published On 2022-03-29 10:17 GMT   |   Update On 2022-03-29 10:17 GMT
திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட நகர, ஒன்றிய ,பேரூராட்சி மற்றும் பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கான அமைப்பு தேர்தல் உடுமலை தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
உடுமலை:

இதில் திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான உடுமலை கே. ராதாகிருஷ்ணன்  எம்.எல்.ஏ., தலைமையில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, முன்னாள் எம்.பி ., ஹரி ஆகியோர் கலந்து கொண்டு விருப்ப மனுக்களை பெற்றுக் கொண்டனர்.

இதில் உடுமலை மற்றும் பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம் ஆகிய பகுதிகளை சேர்ந்த அ.தி.மு.க., நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு உற்சாகமாக விருப்ப மனுக்களை பெற்றுக்கொண்டனர்.
Tags:    

Similar News