உள்ளூர் செய்திகள்
ஆர்ப்பாட்டம்

மணவாளநகரில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்

Published On 2022-03-24 09:16 GMT   |   Update On 2022-03-24 09:16 GMT
திருவள்ளூரை அடுத்த மணவாள நகர் பஸ் நிறுத்தம் அருகே பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் அருகே உள்ள வெங்கத்தூர் முதல் நிலை ஊராட்சி.

இங்கு சாலை வசதி, குடிநீர் வசதி, உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகள் பணிகள் எதுவும் வழங்காமல் நிராகரிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்த நிலையில் கடம்பத்தூர் ஊராட்சி நிராகரிக்கப்படுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பா.ம.க. கட்சியினர் அறிவித்து இருந்தனர்.

அதன்படி இன்று காலை மணவாள நகர் பஸ்நிறுத்தம் அருகே பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

ஆரப்பாட்டத்தில் மாநில துணைப் பொதுச் செயலாளர் பாலயோகி, மாநில அமைப்பு துணை செயலாளர் வெங்கடேசன், மேற்கு மாவட்ட செயலாளர் தினேஷ் குமார், வெங்கத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சுனிதா பாலயோகி, ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News