உள்ளூர் செய்திகள்
கொரோனா பரிசோதனை

தமிழகத்தில் மேலும் 158 பேருக்கு கொரோனா தொற்று- 2 பேர் உயிரிழப்பு

Published On 2022-03-07 16:07 GMT   |   Update On 2022-03-07 16:07 GMT
அரியலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, திருவாரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் புதிய தொற்று பதிவாகவில்லை.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலையில், தற்போதைய நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 158 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 51 ஆயிரத்து 171 ஆக அதிகரித்துள்ளது. 

அதிகபட்சமாக சென்னையில் இன்று 56 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கோவையில் 22 பேருக்கும், செங்கல்பட்டில் 18 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அரியலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, திருவாரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் புதிய தொற்று பதிவாகவில்லை. மற்ற மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் புதிய பாதிப்பு பதிவாகி உள்ளது.

இன்று ஒரே நாளில் 512 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 10 ஆயிரத்து 740 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பினால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 38,017 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் 2,414 பேர் சிகிச்சையில் உள்ளனர். 
Tags:    

Similar News