உள்ளூர் செய்திகள்
கொரோனா பரிசோதனை

தொடர்ந்து குறையும் பாதிப்பு- தமிழகத்தில் மேலும் 1,146 பேருக்கு கொரோனா

Published On 2022-02-18 16:36 GMT   |   Update On 2022-02-18 16:36 GMT
தமிழகத்தில் 21 மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு 50க்கும் குறைவாக உள்ளது, 13 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் புதிய பாதிப்பு பதிவாகி உள்ளது.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலையில், தற்போதைய நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,146 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்றைய பாதிப்பு 1,252 ஆக இருந்த நிலையில் இன்று மேலும் குறைந்துள்ளது. மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 42 ஆயிரத்து 929 ஆக அதிகரித்துள்ளது. 

தொற்று அதிகம் பதிவான சென்னை, கோவையிலும் தொடர்ந்து பாதிப்பு குறைந்து வருகிறது. சென்னையில் இன்று 262 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கோவையில் 188 பேருக்கும், ஈரோட்டில் 64 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 21 மாவட்டங்களில் புதிய பாதிப்பு 50க்கும் குறைவாக உள்ளது. 13 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் புதிய பாதிப்பு பதிவாகி உள்ளது. மயிலாடுதுறை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இன்று ஒரே நாளில் 4,229 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 33 லட்சத்து 84 ஆயிரத்து 278 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பினால் இன்று ஒரே நாளில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 37,970 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 23,772ல் இருந்து 20,681 ஆக குறைந்துள்ளது. 
Tags:    

Similar News