உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

பாளையில் செல்போன் கடையில் திருட்டு

Published On 2022-01-28 10:29 GMT   |   Update On 2022-01-28 10:29 GMT
பாளையில் செல்போன் கடையில் திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை:

பாளை புதுப்பேட்டை தெருவை சேர்ந்தவர் முகம்மது அனிபா (வயது 37). இவர் பாளை வாய்க்கால்பாலம் அருகே செல்போன் கடை மற்றும் செல்போன் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார்.

இன்று காலை அவர் வழக்கம்போல் கடையை திறப்பதற்காக வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது பழுது பார்க்க வந்திருந்த 6 செல்போன்கள் திருட்டு போய் இருந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

இதுகுறித்து அவர் பாளை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News