உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

திசையன்விளையில் முககவசம் அணியாத 40 பேருக்கு அபராதம்

Published On 2022-01-28 09:31 GMT   |   Update On 2022-01-28 09:31 GMT
திசையன்விளையில் பொதுஇடத்தில் முககவசம் அணியாமல் சென்ற 40 பேருக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
திசையன்விளை:

நெல்லை மாவட்டத்தில் பொதுஇடங்களில் முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் திசையன்விளை சப்- இன்ஸ்பெக்டர் செல்வராஜ் (பொறுப்பு) மற்றும் போலீசார் நேற்று மாலை திசையன்விளை அற்புதவினாயகர்கோவில் சந்திப்பில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது முககவசம் அணியாமல் சென்ற 40 பேருக்கு தலா ரூ.500 அபராதம் விதித்து வசூலித்தனர்.
Tags:    

Similar News