உள்ளூர் செய்திகள்
திசையன்விளையில் முககவசம் அணியாத 40 பேருக்கு அபராதம்
திசையன்விளையில் பொதுஇடத்தில் முககவசம் அணியாமல் சென்ற 40 பேருக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
திசையன்விளை:
நெல்லை மாவட்டத்தில் பொதுஇடங்களில் முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் திசையன்விளை சப்- இன்ஸ்பெக்டர் செல்வராஜ் (பொறுப்பு) மற்றும் போலீசார் நேற்று மாலை திசையன்விளை அற்புதவினாயகர்கோவில் சந்திப்பில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது முககவசம் அணியாமல் சென்ற 40 பேருக்கு தலா ரூ.500 அபராதம் விதித்து வசூலித்தனர்.
நெல்லை மாவட்டத்தில் பொதுஇடங்களில் முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் திசையன்விளை சப்- இன்ஸ்பெக்டர் செல்வராஜ் (பொறுப்பு) மற்றும் போலீசார் நேற்று மாலை திசையன்விளை அற்புதவினாயகர்கோவில் சந்திப்பில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது முககவசம் அணியாமல் சென்ற 40 பேருக்கு தலா ரூ.500 அபராதம் விதித்து வசூலித்தனர்.