உள்ளூர் செய்திகள்
கொரோனா பரிசோதனை

தமிழகத்தில் மேலும் 30,215 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2022-01-24 15:10 GMT   |   Update On 2022-01-24 15:10 GMT
தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2.06 லட்சம் பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று மாலை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,51,217 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், 30,215 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 

மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 31 லட்சத்து 64 ஆயிரத்து 205 ஆக அதிகரித்துள்ளது.  பாதிப்பு விகிதம் 20 சதவீதமாக உயர்ந்துள்ளது.

சென்னையில் ஒரே நாளில் 6296 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. செங்கல்பட்டில் 1742 பேருக்கும், கோவையில் 3786 பேருக்கும், திருவள்ளூரில் 746 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 555 பேருக்கும், கன்னியாகுமரியில் 1236 பேருக்கும், மதுரையில் 616 பேருக்கும், திருப்பூரில் 1504 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று ஒரே நாளில் 24,639 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 29 லட்சத்து 20 ஆயிரத்து 457 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பினால் இன்று ஒரே நாளில் 46 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 37,264 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,06,484 ஆக உயர்ந்துள்ளது.  
Tags:    

Similar News