உள்ளூர் செய்திகள்
குறைந்தபட்ச ஊதியம் ரூ.700 வழங்கக்கோரி தூய்மை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
குறைந்தபட்ச ஊதியமாக ரூ.700 வழங்க வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லையில் இன்று தூய்மை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெல்லை:
நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சிதுறை தூய்மை பணியாளர் ஊழியர்சங்கம், சி.ஐ.டி.யு தூய்மை தொழிலாளர் சங்கம் சார்பாக வண்ணார்பேட்டையில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் மோகன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சிவராமன், நாகராஜன், கணேசன், மாடசாமி, சுடலை மணி, கண்ணம்மாள், ஜானகி, செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட பொருளாளர் பெருமாள் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் பாஸ்கரன் கலந்து கொண்டு பேசினார்.
ஆர்ப் பாட்டத்தில் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ. 700 வழங்க வேண்டும், வாரவிடுமுறை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.