உள்ளூர் செய்திகள்
வாகன வசதி இல்லாமல் தவித்த வெளிமாநில தொழிலாளர்கள்
கார்களில் முன்பதிவு செய்து பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
திருப்பூர்:
முழு ஊரடங்கையொட்டி திருப்பூரில் இன்று பஸ் உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படவில்லை. கார்களில் முன்பதிவு செய்து பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
இந்தநிலையில் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் வெளிமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று விட்டு இன்று காலை திருப்பூர் திரும்பினர்.
வாகன வசதி இல்லாததால் திருப்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து தொழிலாளர்கள் மற்றும் பயணிகள் பலர் தங்களது வீடுகளுக்கு நடந்தே சென்றனர்.