search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெளிமாநில தொழிலாளர்கள்"

    • வெளிமாநில தொழிலா ளர்கள் புதியதாக ரேசன் அட்டை வேண்டி பரிந்துரைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • தேனி மாவட்டத்திற்கு புலம் பெயர்ந்த வெளி மாநில தொழிலாளர்களுக்கு தகுதியின் அடிப்படையில் ரேசன் அட்டைகள் வழங்கப்படும்.

    தேனி:

    உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையால் தமிழ்நாட்டில் வசிக்கும் வெளி மாநில தொழிலா ளர்களுக்கு ரேசன் அட்டைகள் வழங்கு மாறு உத்திரவிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் இணைய தளத்தில் பதிவு செய்தும் ரேசன் அட்டை இல்லாத வெளிமாநில தொழிலா ளர்கள் புதியதாக ரேசன் அட்டை வேண்டி பரிந்துரைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட தனிவட்டா ட்சியர் (குடிமைப்பொருள்) / வட்ட வழங்கல் அலுவல ர்களிடம் விண்ணப்பி க்குமாறு கேட்டுக்கொள்ள ப்படுகிறது.

    பிற மாநிலங்களிலிருந்து தொழில் நிமித்தம் காரண மாக தேனி மாவட்டத்திற்கு புலம் பெயர்ந்த வெளி மாநில தொழிலாளர்களுக்கு தகுதியின் அடிப்படையில் ரேசன் அட்டைகள் வழங்க ப்படும்.

    எனவே மத்திய அரசின் இணையதளத்தில் பதிவு செய்தும் ரேசன் அட்டை இல்லாத வெளிமாநில தொழிலாளர்கள் புதியதாக குடும்ப அட்டை வேண்டி சம்மந்தப்பட்ட தனிவட்டாட்சியர் (குடிமைப்பொருள்) / வட்ட வழங்கல் அலுவலர்களிடம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் ஷஜீ வனா தெரிவித்துள்ளார்.

    • வெளி மாநில தொழிலாளர்களின் விவரங்களையும் தொழிலாளர் நலத்துறையின் http://labour.tn.gov.in/ism என்ற இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
    • தொழிலாளர்களின் ஆதார் எண் விவரங்கள், செல்போன் எண், எந்த மாநிலத்தை சேர்ந்தவர் போன்ற விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    சேலம்:

    கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையர் தமிழரசி, சேலம் இணை ஆணையர் புனிதவதி, உதவி ஆணையர் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சேலம் மாவட்டத்தில் உள்ள கடைகள், நிறு வனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங் கள், கோழிப்பண்ணைகள், விவசாயம், உள்ளாட்சி அமைப்புகள், ஆஸ்பத்திரி கள், பள்ளிகள், கல்லூரிகள், முடி திருத்தும் நிலையங் களில் பணிபுரியும் வெளி மாநில தொழிலாளர்களின் விவரங்களையும், சுய வேலை செய்பவர்கள், பாதுகாவலராக பணிபுரிவோர், வீட்டு வேலை செய்யும் வெளி மாநில தொழிலாளர்களின் விவரங்களையும் தொழிலாளர் நலத்துறையின் http://labour.tn.gov.in/ism என்ற இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    அவர்களின் பயனாளர் குறியீடு, கடவுசொல் ஏற்படுத்தி வெளி மாநில தொழிலாளர்களின் ஆதார் எண் விவரங்கள், செல்போன் எண், எந்த மாநிலத்தை சேர்ந்தவர் போன்ற விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். கடைகள், நிறு வனங்கள், தொழிலாளர்கள் நலத்துறையில் படிவம் 3 சான்று பெற்றும் பதிவு செய்ய வேண்டும். மேலும் பேக்கரிகள் மற்றும் உணவு நிறுவன உரிமம் பெற்று தங்களது நிறுவனங்களில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

    மோட்டார் போக்கு வரத்து நிறுவனங்களில் பணிபுரிவர்களின் விவரங்களை மோட்டார் போக்குவரத்து தொழிலா ளர்கள் சட்டத்தின் கீழ் உரிமம் பெற்று பதிவு செய்ய வேண்டும். இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டாத நிறுவனங்கள் ஆய்வின் போது கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப் படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வெளிமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் திருப்பூரில் கல்வியை தொடர மிகவும் சிரமப்படுகின்றனர்.
    • திருப்பூர் மாவட்டத்தில் வெளிமாநில தொழிலாளர் அதிகம் உள்ளனர்.

    திருப்பூர்:

    வேலை வாய்ப்புக்காக பீகார், ஒடிசா, ஜார்கண்ட், மகாராஷ்டிரா என பல்வேறு வெளிமாநில தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் திருப்பூருக்கு புலம்பெயர்ந்து வருகின்றனர். வெளிமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் திருப்பூரில் கல்வியை தொடர மிகவும் சிரமப்படுகின்றனர்.

    தமிழ் மொழி தெரியாததால் பல குழந்தைகள் படிப்பை பாதியில் கைவிடுகின்றனர். இதனால், அவர்களுக்கு தமிழ் மொழி கற்போம் திட்டத்தில் இணைத்து தமிழ் கற்றுக்கொடுக்கப்பட உள்ளது. இதற்கான முதற்கட்ட கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை துணை இயக்குனர் சந்தோஷ், உதவி இயக்குனர் சேதுபதி ஆகியோர் பேசினர். பின்னலாடை உற்பத்தி உள்பட பல்வேறு துறை சார்ந்த நிறுவன மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள் பங்கேற்றனர்.

    இது குறித்து தொழிலக பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் வெளிமாநில தொழிலாளர் அதிகம் உள்ளனர். தமிழ் தெரியாததால் வெளிமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் பலர் பள்ளி படிப்பை பாதியிலேயே கைவிடுகின்றனர். சிலர் குழந்தை தொழிலாளராகிவிடுகின்றனர்.

    தமிழ் மொழி கற்போம் திட்டத்தில் வெளிமாநில குழந்தைகளுக்கு அவர்களது தாய்மொழி வாயிலாகவே தமிழ் கற்றுக்கொடுக்கப்படும். இதற்காக தமிழ் மொழியோடு இந்தி, ஒடியா என 2 மொழித்திறனுள்ளோர் பயிற்சியாளராக நியமிக்கப்படுவர்.

    தங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர், அவர்களது குழந்தைகளின் கல்வி நிலை குறித்த விவரங்களை அளிக்க, மனிதவள மேம்பாட்டு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ் மொழி கற்பதன்மூலம் வெளிமாநில தொழிலாளர் குழந்தைகள் இடை நிற்றல் தவிர்க்கப்படும் என்றனர்.

    ×