உள்ளூர் செய்திகள்
புளியங்குடியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
புளியங்குடியில் போலீசார் ரோந்து சென்றபோது கஞ்சா விற்ற வாலிபர் ஒருவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
புளியங்குடி:
புளியங்குடி சப்-இன்ஸ்பெக்டர் பாரத்லிங்கம் மற்றும் போலீசார் புளியங்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றித்திரிந்த வாலிபரை பிடித்து விசாரித்ததில் அவர் விருதுநகர் மாவட்டம் தளவாய்புரத்தை சேர்ந்த கார்த்திக் (வயது 20) என்பது தெரியவந்தது.
மேலும் அவரிடம் விசாரணை செய்ததில் அவர் சுமார் 1.5 கிலோ அளவிலான கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
கார்த்திக்கை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.