உள்ளூர் செய்திகள்
கோவையில் உள்ள தனியார் மருத்துவம்னையில் பெஸ்ட்ராமசாமி அனுமதிக்கப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருப்பூர்:
கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் பெஸ்ட் ராமசாமி (வயது 76). இவர் திருப்பூர் ராயபுரத்தில் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2 நாட்களாக காய்ச்சல் இருந்தது.
இதைத் தொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கோவையில் உள்ள தனியார் மருத்துவம்னையில் பெஸ்ட்ராமசாமி அனுமதிக்கப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு லேசான தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், நல்ல நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தனர். மேலும் அவருடைய குடும்பத்தினர், உதவியாளர் ஆகியோருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.