உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

தின்னர் கொட்டியதால் விபத்து -தீயில் கருகி இளம்பெண் சாவு

Published On 2022-01-08 13:23 GMT   |   Update On 2022-01-08 13:23 GMT
சங்கரன்கோவில் அருகே பெயிண்டுக்கு ஊற்றுவதற்காக பயன்படுத்தப்படும் தின்னர் கொட்டியதால் உடலில் தீ பிடித்து இளம்பெண் பலியானார்.
தென்காசி:

சங்கரன்கோவில் அருகே உள்ள கீழநீலிதநல்லூர் ஆர்.சி. வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார்(வயது 30). பெயிண்டர்.

இவருக்கு கோவில்பட்டி அருகே உள்ள நாலட்டின்புதூரை சேர்ந்த கவுசல்யா(24) என்ற பெண்ணுடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 1 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

கடந்த 1-ந்தேதி கவுசல்யா அந்த பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு செல்வதற்காக புறப்பட்டார். அப்போது சமையல் அறையில் வெந்நீர் வைத்து கொண்டிருந்ததார். 

அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், பெயிண்டுக்கு ஊற்றுவதற்காக பயன்படுத்தப்படும் தின்னர் டப்பாவை தட்டிவிட்டதாக தெரிகிறது.

இதனால் அடுப்பில் இருந்த நெருப்பில் தின்னர் பட்டு, கவுசல்யாவின் உடலில் தீப்பிடித்தது. இதனால் கவுசல்யா வலி தாங்க  முடியாமல் அலறித்துடித்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர்.

உடனே அவரை ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச் சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு கவுசல்யா பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து பனவடலிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் சங்கரன்கோவில் போலீஸ் துணை சூப்பிரண்டு ஜாகீர் உசேனும், இளம்பெண் சாவு குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News