உள்ளூர் செய்திகள்
விபத்துக்குள்ளான லாரி.

லாரி சக்கரத்தில் சிக்கி தனியார் பள்ளி பெண் பணியாளர் பலி

Published On 2022-01-07 12:51 GMT   |   Update On 2022-01-07 14:20 GMT
இன்று காலை உறவினர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் மாசிலாமணி பள்ளிக்கு சென்றார்.
திருப்பூர்:

திருப்பூர் பெருந்தொழுவு சாலை எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் மாசிலாமணி (வயது 55). இவரது கணவர் இறந்து விட்டார். 

இதனால் மாசிலாமணி தனியார் பள்ளியில் உதவியாளராக பணியாற்றி வந்தார்.

இன்று காலை உறவினர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில்  பள்ளிக்கு சென்றார். பெருந்தொழுவு சாலை தனியார் பள்ளி அருகே செல்லும் போது அந்த வழியாக வந்த சிமெண்ட் கலவை எந்திர லாரியும் மோட்டார் சைக்கிளும் மோதின. 

இதில் நிலைதடுமாறி விழுந்த மாசிலாமணி லாரி சக்கரத்தில் சிக்கினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்த தகவல் அறிந்ததும் நல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News