உள்ளூர் செய்திகள்
மிரட்டல்

மதுரை அருகே தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

Published On 2021-12-22 22:31 GMT   |   Update On 2021-12-22 22:31 GMT
மதுரை அருகே தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:

மதுரை செல்லூர் லெனின் நகரை சேர்ந்தவர் குரும்பன் (வயது 42). செல்லூர் கீழதோப்பு பகுதியை சேர்ந்தவர் முத்துவீரன் (32). இவர்கள் இருவரும் முனிச்சாலை பகுதியில் சுமைதூக்கும் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். சம்பவத்தன்று வேலை செய்யும் இடத்தில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது முத்துவீரன் கற்களால் குரும்பனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துவீரனை கைது செய்தனர்.
Tags:    

Similar News