உள்ளூர் செய்திகள்
மேட்டூர் அருகே ரெயிலில் அடிபட்டு வெல்டர் பலி
மேட்டூர் அருகே ரெயிலில் அடிபட்டு வெல்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேட்டூர்:
மேட்டூர் புதுசாம்பள்ளி சுடுகாடு அருகே ரெயில் தண்டவாளம் செல்கிறது. இந்த தண்டவாளம் அருகே சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் கருமலைக்கூடல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் இறந்தவர் மேட்டூர் ராமன் நகர் அருகே உள்ள இரட்டை புளியமரம் பகுதியை சேர்ந்த வினோத் (வயது 30) என்பது தெரியவந்தது. இவர் வெல்டர் ஆக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை என்பதும் தெரியவந்தது. போலீசார் இதுகுறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.