உள்ளூர் செய்திகள்
தற்கொலை

சின்னமனூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை

Published On 2021-12-19 10:49 GMT   |   Update On 2021-12-19 10:49 GMT
சின்னமனூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சின்னமனூர்:

சின்னமனூர் அருகே உள்ள ஓடைப்பட்டியை சேர்ந்தவர் வெண்ணிலா(வயது 42). இவருக்கு போடியை சேர்ந்த ரவி என்பவருடன் திருமணமாகி குபேந்திரன், லோகேந்திரன் என 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ரவி இறந்து விட்டார். இதனால் வெண்ணிலா சொந்த ஊரான ஓடைப்பட்டியில் மகன்களுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் வெண்ணிலா உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதியடைந்தார். இதனால் மனஉளைச்சல் அடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதையடுத்து அவர் சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று வெண்ணிலா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஓடைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News