உள்ளூர் செய்திகள்
மாணவர் தற்கொலை

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்ணில் தேர்ச்சி - மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-12-16 19:19 GMT   |   Update On 2021-12-16 19:19 GMT
செங்குன்றம் அருகே நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்ணில் தேர்ச்சி எடுத்ததால் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
செங்குன்றம்:

சென்னையை அடுத்த புழல் காவாங்கரை கண்ணப்பசாமி நகரைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவருடைய மகன் சுஜித்(வயது19). இவர், இரண்டு முறை நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெறவில்லை. இந்த முறை நீட் தேர்வு எழுதி, அதில் குறைந்த மதிப்பெண்ணில் தேர்ச்சி பெற்று விட்டார். 

இதனால் மருத்துவ படிப்பு படிக்க தனக்கு சீட் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற ஏக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த சுஜித், நேற்று மதியம் அவருடைய தாயார் கடைக்கு சென்ற நேரத்தில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து புழல் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News