உள்ளூர் செய்திகள்
தற்கொலை

தர்மபுரி அருகே தொழிலாளி தற்கொலை

Published On 2021-12-14 10:00 GMT   |   Update On 2021-12-14 10:00 GMT
தர்மபுரி அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி:

தர்மபுரி செந்தில் நகரை சேர்ந்தவர் குபேந்திரன் (வயது 34). தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். இவர் மது போதையில் விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News