உள்ளூர் செய்திகள்
டாஸ்மாக் கடையில் தகராறு: வங்கி ஊழியரை தாக்கிய 3 பேர் கைது
மதுரையில் டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக வங்கி ஊழியரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை:
மதுரை தெற்கு வெளி வீதி ஞானம்மாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 33). இவர் அதே பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் கார்த்திகேயன் நேற்று மதியம் எப்.எப். ரோடு பகுதியில் உள்ள ஒயின்ஷாப் கடைக்கு சென்றார். அப்போது அவருக்கும் கீரைத்துறை சித்திரவேல் (71) என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த அவர் மேலதோப்பு ஜெயபால் (42), சகோதரர் செல்வம் மகன் ஹரிஹரசுதன் (24) ஆகிய 3 பேருடன் சேர்ந்து கார்த்திகேயனை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கி விட்டு தப்பிச் சென்றனர்.
இதுறித்து கார்த்திகேயன் தெற்கு வாசல் போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் லிங்க பாண்டியன் வழக்குப்பதிவு செய்து ஜெயபால், ஹரி ஹரசுதன், சித்திரவேல் ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை தெற்கு வெளி வீதி ஞானம்மாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 33). இவர் அதே பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் கார்த்திகேயன் நேற்று மதியம் எப்.எப். ரோடு பகுதியில் உள்ள ஒயின்ஷாப் கடைக்கு சென்றார். அப்போது அவருக்கும் கீரைத்துறை சித்திரவேல் (71) என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த அவர் மேலதோப்பு ஜெயபால் (42), சகோதரர் செல்வம் மகன் ஹரிஹரசுதன் (24) ஆகிய 3 பேருடன் சேர்ந்து கார்த்திகேயனை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கி விட்டு தப்பிச் சென்றனர்.
இதுறித்து கார்த்திகேயன் தெற்கு வாசல் போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் லிங்க பாண்டியன் வழக்குப்பதிவு செய்து ஜெயபால், ஹரி ஹரசுதன், சித்திரவேல் ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.