உள்ளூர் செய்திகள்
முககவசம் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம்
இருசக்கர வாகனங்களில் முககவசம் அணியாமல் வந்த 20 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
நாமகிரிப்பேட்டை:
நாமகிரிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் மற்றும் போலீசார் நெடுஞ்சாலை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் முககவசம் அணியாமல் வந்த 20 பேருக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், முககவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.