செய்திகள்
கைது

திருமண ஆசை காட்டி இளம்பெண் கற்பழிப்பு- வாலிபர் கைது

Published On 2021-11-20 09:05 GMT   |   Update On 2021-11-20 09:05 GMT
திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை கற்பழித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ராயபுரம்:

கொருக்குப்பேட்டை ரங்கநாதபுரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் தீபன் சக்கரவர்த்தி (31). ஆன்லைன் மூலம் வியாபாரம் செய்து வருகிறார்.

இவர் மாதவரத்தை சேர்ந்த 28 வயது இளம்பெண்ணை கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இந்த நிலையில் தீபன் சக்கரவர்த்தி வேறு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதுபற்றி அந்தப் பெண் கேட்டதற்கு தீபன் சக்ரவர்த்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் தண்டையார்பேட்டை மகளிர் காவல் நிலைய போலீசார் தீபன் சக்ரவர்த்தி மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை புழல் சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News