செய்திகள்
கோப்பு படம்

மதுரை அருகே மின்சாரம் தாக்கி கொத்தனார் பலி

Published On 2021-11-19 14:49 GMT   |   Update On 2021-11-19 14:49 GMT
மதுரை அருகே மின்சாரம் தாக்கி கொத்தனார் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உசிலம்பட்டி:

மதுரை சேடப்பட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூரை சேர்ந்தவர் விஜயன் (வயது 37). கொத்தனார். சம்பவத்தன்று தனது வீட்டில் உள்ள மோட்டாரை இயக்க சென்றபோது மின்சாரம் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த விஜயனை சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் விஜயன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சேடபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News