செய்திகள்
டாஸ்மாக் கடை

சென்னையில் 40 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன

Published On 2021-11-12 08:12 GMT   |   Update On 2021-11-12 12:21 GMT
மதுக்கடைகளை திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒருசில பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட்டதாலும் கடைகள் திறக்கப்படவில்லை. 5 நாட்களாக மழைநீர் வடியாமல் இருப்பதால், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டே உள்ளன.

சென்னை:

சென்னையில் தொடர்ந்து பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன. பெட்டி கடைகள், மளிகை கடைகள் போன்ற சிறு கடைகளும் மழை பாதிப்பால் திறக்கப்படாமல் உள்ளது.

டாஸ்மாக் மது கடைகளும் 40 இடங்களில் செயல்படவில்லை. கிண்டி, அடையாறு, தி.நகர், சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், வேளச்சேரி, தேனாம்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் மழைநீர் தேங்கி நிற்பதோடு கடைகளுக்குள்ளும் புகுந்தது.

இதனால் மதுக்கடைகளை திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒருசில பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட்டதாலும் கடைகள் திறக்கப்படவில்லை. 5 நாட்களாக மழைநீர் வடியாமல் இருப்பதால், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டே உள்ளன.

 


மேலும் மது விற்பனையும் பாதியாக குறைந்துள்ளது. மழையால் வருமானம் குறைந்ததால் மது பிரியர்கள் குடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட சில மாவட்டங்களில் மது விற்பனை 50 சதவீதத்துக்கும் குறைவாக நடந்துள்ளது. கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மது விற்பனை மிகவும் மோசமான அளவில் இருந்ததாக டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News