செய்திகள்
விபத்து பலி

நன்னிலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலி

Published On 2021-11-06 12:32 GMT   |   Update On 2021-11-06 12:32 GMT
நன்னிலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்னிலம்:

குடவாசல் அருகே உள்ள முகந்தனூர் காலனி தெருவை சேர்ந்தவர் விஜய் (வயது20). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தனது நண்பர் தீபக் (20) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கங்களாஞ்சேரியில் இருந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை விஜய் ஓட்டினார். நன்னிலம் அருகே பொம்மாநத்தம் என்ற இடத்தில் சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே விஜய் பரிதாபமாக இறந்தார். தீபக் காயங்களுடன் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தீபக் கொடுத்த புகாரின் பேரில் நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News