செய்திகள்
மகாபெரியசாமி கோவிலில் தெலுங்கானா கவர்னர் தமிழிசைசவுந்தரராஜன் குடும்பத்துடன் சாமிதரிசனம் செய்தபோது எடுத்தப்படம்

திருப்பூர் குலதெய்வ கோவிலில் தமிழிசை சவுந்தரராஜன் குடும்பத்துடன் வழிபாடு

Published On 2021-10-28 10:07 GMT   |   Update On 2021-10-28 10:07 GMT
ஊர் மக்களுடன் ஒன்றாக அமர்ந்து புகைப்படம் எடுத்து கொண்ட அவர் பின்னர் அங்கிருந்து காரில் புதுச்சேரிக்கு புறப்பட்டு சென்றார்.
திருப்பூர்:

தெலுங்கானா மாநில கவர்னரும், புதுச்சேரி துணைநிலை கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே வணங்காமுடியனூரில் உள்ள குலதெய்வ கோவிலான மகா பெரியசாமி கோவிலில் இன்று குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.

அவருக்கு கோவில் நிர்வாகம் மற்றும் ஊர் மக்கள் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அங்கு காத்திருந்த ஊர் மக்களுடன் ஒன்றாக அமர்ந்து புகைப்படம் எடுத்துகொண்ட அவர் பின்னர் அங்கிருந்து காரில் புதுச்சேரிக்கு புறப்பட்டு சென்றார்.

முன்னதாக பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பொன்னாடை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். கவர்னர் வருகையையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 
Tags:    

Similar News