செய்திகள்
வழக்கு பதிவு

பணகுடி அருகே வருவாய் அலுவலரை மிரட்டிய விவசாயி மீது வழக்கு

Published On 2021-10-20 11:30 GMT   |   Update On 2021-10-20 11:30 GMT
பணகுடி அருகே வருவாய் அலுவலரை மிரட்டிய விவசாயி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:

பணகுடி அருகே உள்ள பழவூரில் கிராம வருவாய் அலுவலராக சுப்புலெட்சுமி (வயது42) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் காவல்கிணறை சேர்ந்த ஜெயசீலன் என்பவர் கொடுத்த விண்ணப்பத்தை நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று சுப்புலெட்சுமி பணியில் இருக்கும் போது காவல் கிணறை சேர்ந்த விவசாயி ஜெயசீலன் என்பவர் சுப்புலெட்சுமியின் செல் போனில் தொடர்பு கொண்டு அவதூறாக பேசி உள்ளார்.

மேலும் வாட்ஸ்- அப்பிலும் மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து வருவாய் அலுவலர் சுப்பு லெட்சுமி பழவூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயசீலனை தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News