செய்திகள்
விபத்து

டி.ஜி.பி. அலுவலகம் அருகே விபத்து: கார் மோதி சப்-இன்ஸ்பெக்டர் பலி

Published On 2021-10-19 09:19 GMT   |   Update On 2021-10-19 09:19 GMT
டி.ஜி.பி. அலுவலகம் அருகே கார் மோதி சப்-இன்ஸ்பெக்டர் பலியான சம்பவம் தொடர்பாக அண்ணா சதுக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திரா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சென்னை:

மெரினா காமராஜர் சாலை டி.ஜி.பி. அலுவலகத்தில் டெக்னிக்கல் பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் பிரசன்னா.
திருமணமாகாத இவரது சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஆகும். சென்னையில் தங்கியிருந்து வேலை செய்து வந்தார்.

நேற்று இரவு 7.30 மணியளவில் டி.ஜி.பி. அலுவலகத்தில் பணியை முடித்து விட்டு காமராஜர் சாலையில் பி.ஆர்.ஓ. நுழைவுவாயில் வழியாக சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா வெளியில் வந்தார். அப்போது அவர் சாலையை கடந்தார். அந்த நேரத்தில் வடபழனியில் இருந்து அடையார் நோக்கி வந்த கார் பிரசன்னா மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் மயங்கினார்.

உடனடியாக பிரசன்னாவை அங்கிருந்த போலீசார் மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி பிரசன்னா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி அண்ணா சதுக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திரா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News