செய்திகள்
தொடர் வழிப்பறி - வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கானஆணையை மகாராஜாவிடம் போலீசார் வழங்கினர்.
திருப்பூர்:
திருப்பூர் வேலம்பாளையம் அடுத்த அமர்ஜோதி கார்டன் அருகில் கடந்த ஆகஸ்டு 12-ந்தேதி சாலையில் நடந்து சென்றவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி மொபைல் போனை பறித்து கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்தில், சாமுண்டிபுரத்தை சேர்ந்த மகாராஜா (வயது 19) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது போன் பறிப்பு, கொலை முயற்சி வழக்கு உள்ளது.
மேலும் பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் ஏற்படும் வகையில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததால் மகாராஜாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் வனிதா உத்தரவிட்டார்.
இதையடுத்து அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான ஆணையை அவரிடம் வழங்கினர். திருப்பூர் மாநகரில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 46 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.