செய்திகள்
நத்தம் அருகே பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நத்தம்:
நத்தம் கோவில்பட்டியை சேர்ந்தவர் ஜோசப் ஜேசுதாஸ். இவரது மனைவி கமலிராணி (வயது 46). இவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்ததும் நத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கமலிராணி உடலை கைப்பற்றி நத்தம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குபதிவுசெய்து கமலிராணி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.