செய்திகள்
திருட்டு

தர்மபுரி அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு

Published On 2021-10-10 07:55 GMT   |   Update On 2021-10-10 07:55 GMT
தர்மபுரி அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி:

தர்மபுரி அக்ரகார தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 26). இவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை அவருடைய நண்பர் கோவிந்தன் எடுத்துச் சென்றார். பின்னர் அக்ரகார தெருவில் தனது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். அந்த மோட்டார் சைக்கிள் திருட்டு போனது. அதன் மதிப்பு ரூ.1 லட்சம் என கூறப்படுகிறது. இதுகுறித்து வேல்முருகன், தர்மபுரி டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடி சென்றவர்களை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News