செய்திகள்
மோட்டார்சைக்கிளில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது
கூடலூரில் இருந்து குமுளிக்கு மோட்டார்சைக்கிளில் கஞ்சா கடத்திய 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 15 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூரில் இருந்து கேரள மாநிலம் குமுளிக்கு மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தப்படுவதாக கூடலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமணிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் முத்துமணி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் வடக்கு அரசமரம் பஸ் நிறுத்தம் பகுதியில் வாகன தணிக்கை செய்தனர் அப்போது 2 பேர் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
அவர்களை போலீசார் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அவர்கள் கொண்டு வந்த பையில் 15 கிலோ கஞ்சா இருந்தது. போலீசார் விசாரணையில் அவர்கள் கூடலூர் 1-வது வார்டு மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வமணி (வயது 37), சிவகாமன் (35) என்பதும், கூடலூரில் இருந்து குமுளிக்கு கஞ்சா கடத்தி செல்வதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 15 கிலோ கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார்சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தேனி மாவட்டம் கூடலூரில் இருந்து கேரள மாநிலம் குமுளிக்கு மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தப்படுவதாக கூடலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமணிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் முத்துமணி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் வடக்கு அரசமரம் பஸ் நிறுத்தம் பகுதியில் வாகன தணிக்கை செய்தனர் அப்போது 2 பேர் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
அவர்களை போலீசார் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அவர்கள் கொண்டு வந்த பையில் 15 கிலோ கஞ்சா இருந்தது. போலீசார் விசாரணையில் அவர்கள் கூடலூர் 1-வது வார்டு மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வமணி (வயது 37), சிவகாமன் (35) என்பதும், கூடலூரில் இருந்து குமுளிக்கு கஞ்சா கடத்தி செல்வதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 15 கிலோ கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார்சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.