செய்திகள்
தமிழகத்தில் இன்று 1,359 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் தற்போது 16,379 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.
அதன்படி, தமிழகத்தில் இன்று 1,359 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 75 ஆயிரத்து 592 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது 16,379 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,43,355 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.
வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 1,473 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 23 ஆயிரத்து 459 ஆக உயர்ந்துள்ளது.
ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 35,754 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று மேலும் 169 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்... புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு