செய்திகள்
கோப்புப்படம்

தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 1,467 பேருக்கு கொரோனா

Published On 2021-10-04 14:37 GMT   |   Update On 2021-10-04 14:37 GMT
தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி 16, 864 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 1,467 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,559 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 16 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 16,864 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இன்று 1,48,749 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 1,48,229 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 26,69,962 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 26,17,432 பேர் குணமடைந்துள்ளனர். 35,666 பேர் உயிரிழந்துள்ளனர்.
Tags:    

Similar News