செய்திகள்
தற்கொலை

ராமநாதபுரம் அருகே மீன்வியாபாரி தற்கொலை

Published On 2021-10-03 14:31 GMT   |   Update On 2021-10-03 14:31 GMT
ராமநாதபுரம் அருகே மீன்வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் ஈசாபள்ளிவாசல் தெருவை சேர்ந்த பாலு என்பவரின் மகன் செந்தில்குமார் (வயது40). ராமநாதபுரம் மீன் மார்க்கெட்டில் மீன்வியாபாரம் செய்து வந்தார். இவரின் மனைவி மற்றும் குழந்தைகள் பரமக்குடி எமனேசுவரத்தில் வசித்து வந்துள்ளனர். மீன்வியாபாரம் செய்வதற்காக செந்தில்குமார் ராமநாதபுரத்தில் தங்கி இருந்துள்ளார். இந்தநிலையில் செந்தில்குமார் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News