செய்திகள்
மதுரை அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
மதுரை அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஆலங்குளத்தை சேர்ந்தவர் தீபக் (வயது 23). இவருடைய மனைவி ரேஷ்மா(21). திருமணம் முடிந்து இவர்கள் மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் வசித்து வந்தனர். இதற்கிடையில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். மனைவி பிரிந்து சென்ற வேதனையில் தீபக் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.