செய்திகள்
தொழிலாளி மரணம்

குளித்தலை அருகே கட்டிட தொழிலாளி திடீர் மரணம்

Published On 2021-10-03 11:47 GMT   |   Update On 2021-10-03 11:47 GMT
குளித்தலை அருகே கட்டிட தொழிலாளி திடீர் மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளித்தலை:

குளித்தலை அருகே உள்ள பரளி மேலக்குடித்தெரு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 51), கட்டிட தொழிலாளி. இவரது மகளை தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்கக்கோரி இவரது சகோதரி கேட்டுள்ளார். ஜாதகம் சரியில்லாத காரணத்தால் பாலசுப்பிரமணியன் பெண் கொடுக்க மறுத்துள்ளார். இதையடுத்து பாலசுப்பிரமணியனின் சகோதரியின் மகன்களான வெங்கடேஷ், சரவணன் ஆகியோர் பாலசுப்பிரமணியனிடம் நேற்று முன்தினம் பெண் கேட்டு தகராறு செய்துள்ளனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை விலக்கி விட்டுள்ளனர். இந்தநிலையில் பாலசுப்பிரமணியனுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் பாலசுப்பிரமணியன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News