செய்திகள்
கோப்புப்படம்

விழுப்புரம் அருகே வேலை வாங்கி தருவதாக 52 பேரிடம் ரூ.80 லட்சம் மோசடி

Published On 2021-09-30 05:15 GMT   |   Update On 2021-09-30 05:15 GMT
விழுப்புரம் அருகே வேலை வாங்கி தருவதாக கூறி 52 பேரிடம் ரூ.80 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:

விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி போலீஸ் சரகம் வி.சாத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 42). இவர் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி அந்த கிராமத்தை சேர்ந்த மக்களிடம் ரூ. 80 லட்சம் பெற்று உள்ளார். ஆனால் யாருக்கும் வேலை வாங்கி கொடுக்கவில்லை.

எனவே பாதிக்கப்பட்டவர்கள் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதனடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா கூறுகையில் அரசு வேலை வாங்கித் தருவதாக அல்லது வெளிநாட்டில் வேலை வாய்ப்பு வாங்கி தருவதாக கூறும் மோசடி நபர்களிடம் யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றார்.
Tags:    

Similar News