செய்திகள்
தற்கொலை

பொம்மிடி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-09-27 15:18 GMT   |   Update On 2021-09-27 15:18 GMT
பொம்மிடி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொம்மிடி:

பொம்மிடி அருகே உள்ள நத்தமேடு கிராமத்தை சேர்ந்தவர் பொன்ராஜ். இவரது மகள் சரண்யா (வயது 20). இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட சரண்யா நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பொம்மிடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று அவருடைய உடலை கைப்பற்றி தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News