செய்திகள்
இறந்து போன ஜோதீஸ்வரனையும், காயமடைந்த ஆசிக் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதையும் படத்தில் காணலாம்.

திருப்பூர் வாலிபர் சாவில் சந்தேகம் - கொலை செய்யப்பட்டு தண்டவாளத்தில் வீசப்பட்டாரா?

Published On 2021-09-27 09:14 GMT   |   Update On 2021-09-27 09:14 GMT
நண்பர்கள் 4 பேர் எங்கு சென்றார்கள், அவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:

திருப்பூர் கொங்கு மெயின் ரோடு, எம்.எஸ். நகரை சேர்ந்தவர் ஜோதீஸ்வரன்(வயது 24). இவர் மற்றும் அவரது நண்பர்கள் ஆசிக்(29), மோகன்(27), முரளி (26), கார்த்தி(30) உட்பட 6 பேர் மதுபாட்டில்களை வாங்கி கொண்டு திருப்பூர் ரெயில்வே குட்ஷெட் அருகே சென்றதுடன், சாலையோரம் காரை நிறுத்தி விட்டு மது அருந்தியுள்ளனர். 

அப்போது போதை தலைக்கேறிய நிலையில் நள்ளிரவில் தண்டவாளத்தில் இறங்கி செல்போனில் ‘செல்பி’ எடுத்து கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த ரெயில் மோதியதில்  ஜோதீஸ்வரன் இறந்தார். ஆசிக் படுகாயமடைந்தார்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் திருப்பூர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் காயமடைந்த ஆசிக்கை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் பலியான ஜோதீஸ்வரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அவர்களது நண்பர்கள் 4பேர் எங்கு சென்றார்கள், அவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்கள் மாயமானதால் ஜோதீஸ்வரன் சாவில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

போதை மயக்கத்தில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஜோதீஸ்வரன் தாக்கப்பட்டதில் இறந்தாரா? அல்லது ரெயிலில் அடிபட்டு ஜோதீஸ்வரன் இறந்ததால் பயந்து தப்பி சென்றனரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

நண்பர்களிடம் நடத்தப்படும் விசாரணையில் ஜோதீஸ்வரன் இறந்ததற்கான காரணம் குறித்த முழு விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News