செய்திகள்
திருட்டு

தியாகதுருகம் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு

Published On 2021-09-24 11:41 GMT   |   Update On 2021-09-24 11:41 GMT
தியாகதுருகம் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்டாச்சிமங்கலம்:

தியாகதுருகம் அருகே சூ.பாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசாமி(வயது 57). இவர் சம்பவத்தன்று தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சூளாங்குறிச்சியில் உள்ள தனக்கு சொந்தமான மற்றொரு வீட்டுக்கு தூங்க சென்றார். பின்னர் மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் துரைசாமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டர் சைக்கிளை திருடிச்சென்ற மர்ம மனிதனை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News